முதல்வரின் பிரச்சார பயண திட்டத்தில் மாற்றம்

 

முதல்வரின் பிரச்சார பயண திட்டத்தில் மாற்றம்

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 4வது கட்ட பிரச்சாரமாக இன்று 27ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட இருந்தது. இந்த பிரச்சார பயண திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது.

முதல்வரின் பிரச்சார பயண திட்டத்தில் மாற்றம்

30ம் தேதிக்காக பிரச்சார திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. அன்று பகல் 2.30 மணி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து திருச்சி செல்கிறார் முதல்வர். மாலை 6 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவிட்டு, இரவு 9.35 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை திரும்புகிறார் முதல்வர்.

அதிமுக தலைமைக்கழகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.