’’இவ்வளவு பெரிய பிரச்சனையில் ஆதரவு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி’’

 

’’இவ்வளவு பெரிய பிரச்சனையில் ஆதரவு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி’’

பிரபல திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நேற்று முன் தினம் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பரபரப்பு வீடியோவினை வெளியிட்டார். அதில், ‘’சொந்தமாக ஒரு வீடு கட்டவேண்டும் என்று எனக்கு கனவு இருந்தது. கனவு நிஜமாக நான் கட்டிய வீட்டிற்கு இன்று பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. எதிர்த்து கேட்ட பின் பிரச்சனை பெரிதாகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால்தான் நான் உங்களிடம் பேசுகிறேன்’’ என்று சொல்லிக்கொண்டே வந்தவர், ‘’மற்றவற்றை அடுத்த வீடியோவில் பேசுவோம்’’ என்று சொல்லி இருந்தார்.

’’இவ்வளவு பெரிய பிரச்சனையில் ஆதரவு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி’’

இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அடுத்தும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘’ வணக்கம். நேத்து நான் போட்ட வீடியோவுக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்குமுன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. ஆதரவு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

’’இவ்வளவு பெரிய பிரச்சனையில் ஆதரவு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி’’

மதில்…நான் ஒரு சொந்த வீடு கட்டுனேன் என்றால் அதைச்சுற்றிலும் ஒரு மதில் சுவர் கட்டுவேன் இல்லையா? எனக்கு சொந்தமான மதில் சுவற்றை என்னை கேட்காம, இந்த கட்சிக்காரர்கள் வந்து ஆக்கிரமித்தால் அது எந்தவிதத்தில் நியாயம்? என் சுவர் என் உரிமை என்று நான் தட்டிக்கேட்க போனதால்தான் இந்த பிரச்சனை வந்தது. அது என்ன பிரச்சனை ? எவ்வளவு பெரிய பிரச்சனை? அதை எப்படி சமாளிச்சேன் என்பதை நான் உங்களுக்கு சொல்றேன்; சாரி, அதை காட்டுறேன்’’என்று தெரிவித்துள்ளார்.