‘’நீ ஒரு மைக்கை பிடி நான் ஒரு மைக்கை பிடிக்கிறேன்.. ’’-ஸ்டாலின் மீது முதல்வர் ஆவேச பாய்ச்சல்

 

‘’நீ ஒரு மைக்கை பிடி நான் ஒரு மைக்கை பிடிக்கிறேன்.. ’’-ஸ்டாலின் மீது முதல்வர் ஆவேச பாய்ச்சல்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர் பிரச்சாரத்தில் இருப்பதால் தொண்டை பேச முடியாத நிலை உள்ளது. அப்படி இருந்தும் அவர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

‘’நீ ஒரு மைக்கை பிடி நான் ஒரு மைக்கை பிடிக்கிறேன்.. ’’-ஸ்டாலின் மீது முதல்வர் ஆவேச பாய்ச்சல்

அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலினுக்கு ஒவ்வொரு பிரச்சாரத்திலும் பதிலடி கொடுத்து வருகிறார் முதல்வர். ஆனால், திருப்பத்தூர் பிரச்சாரத்தில் ரொம்ப சூடாக பதிலடி கொடுத்தார்.

’’நான் போகுற இடத்துல எல்லாம் தெளிவாகத்தான் பேசிக்கிட்டு வர்றேன். ஸ்டாலின் அவர்களே எங்க மேல குற்றம் இருந்தா சொல்லுங்க. நாங்க பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.

‘’நீ ஒரு மைக்கை பிடி நான் ஒரு மைக்கை பிடிக்கிறேன்.. ’’-ஸ்டாலின் மீது முதல்வர் ஆவேச பாய்ச்சல்

வா…இங்க திருப்பத்தூருக்கே வா… உங்க பழைய மந்திரி இருக்காரு இங்க.. அவரு கூட நிற்கட்டும்..எங்க வேட்பாளர் மருது அழகுராஜ். அற்புதமாக பேசக்கூடியவர். சிந்தித்து செயல்படக்கூடியவர். இதுமாதிரி ஒரு ஸ்டேஜ் போடலாம். ஏற்பாடு பண்ணச்சொல்றேன். இங்கேயே நீ ஒரு மைக்கைப்பிடி நான் ஒரு மைக்கைபி பிடிக்கிறேன். எங்க மேல குற்றம் சுமத்துறியா நாங்க பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். நாங்க கேட்குற கேள்விக்கு நீ பதில் சொல்லணும். நீ கேட்குற கேள்விக்கு நான் பதில் சொல்லத்தயார். ஆனா, அதுக்கு வரவே மாட்டேங்குறார்.

‘’நீ ஒரு மைக்கை பிடி நான் ஒரு மைக்கை பிடிக்கிறேன்.. ’’-ஸ்டாலின் மீது முதல்வர் ஆவேச பாய்ச்சல்

ஊழல்..ஊழல்.. வா.. பேசு. மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும். அவுங்கதான் நீதிபதிகள். வரமாட்டேங்குற… ஏன்னா.. உண்மையே கிடையாது. பேசுறது பூரா பொய்தான்.. பொய்யைத்தான் மூலதனமா வச்சிக்கிட்டு இருக்கிறாரு.. பொய்யை பேசி பேசி மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி கொல்லைப்புறத்தின் வழியாக ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். அது ஒருகாலமும் முடியாது. தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்க தெரிந்தவர்கள்’’என்றார் முதல்வர்.

முதல்வரின் இந்த சவால் பேச்சைக் கேட்டு தொண்டர்கள் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரித்தனர்.