குணச்சித்திர நடிகர்களின் அடுத்தடுத்த மரணங்கள்; திரையுலகினர் அதிர்ச்சி

 

குணச்சித்திர நடிகர்களின் அடுத்தடுத்த மரணங்கள்; திரையுலகினர் அதிர்ச்சி

சென்னை சூளைமேட்டில் ஒரு ஆட்டோவில் சடலமாக கிடந்த நடிகர் ‘விருச்சிக காந்த்’பாபுவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது மர்ம மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிரவைத்திருக்கிறது.

குணச்சித்திர நடிகர்களின் அடுத்தடுத்த மரணங்கள்; திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ்சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றான ‘காதல்’படத்தில் விருச்சிககாந்த் என்ற கேரக்டரில் நடித்தவர் பாபு. மேன்சனில் தங்கியிருக்கும் டைரக்டரிடம், பல்வேறு கெட்டப்களில் இருக்கும் தனது புகைப்படத்தினை காட்டி வாய்ப்பு கேட்பார் பாபு. முதல் படமே கில்லி மாதிரி ஒரு படம் பண்ணனும்னு சொல்லுவார். ப்ரண்ட்ஸ் கேரக்டர் மாதிரி எல்லாம் சின்னச்சின்ன ரோல் வேண்டாமா என்று கேட்க, இல்ல சார் ஸ்டிரெயிட்டா ஹீரோதான் என்று சொல்லுவார் பாபு. தனது பெயரையும் ரஜினிகாந்த், விஜயகாந்த் மாதிரி விருச்சிககாந்த் என்று மாற்றிக்கொண்டதாகவும் சொல்லுவார். ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட காமெடி சீன் அது.

குணச்சித்திர நடிகர்களின் அடுத்தடுத்த மரணங்கள்; திரையுலகினர் அதிர்ச்சி

காதல் படத்தை தொடர்ந்து விஜய் நடித்த வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில், பெற்றோரும் காலம் சென்றதால், மனநிலை பாதித்து சாலைகளில் சுற்றி திரிவதாக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிரவைத்தது.

பாபுவின் நிலை கண்டு சினிமா துறையினர் சிலர் அவருக்கு உதவிகள் செய்தனர்.

இந்நிலையில், சென்னை சூளைமேட்டில் ஒரு ஆட்டோவில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. எப்படி மரணம் அடைந்தார் என்பது குறித்த விபரங்கள் எதுவும் இல்லை.

உடலை மீட்ட போலிசார், கீழ்பாக்கம் மருத்துவகல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்புதான் தீப்பெட்டி கணேசன் மரணம் அடைந்தார். இப்போது பாபு. வறுமையில் வாந்த குணச்சித்திர நடிகர்களின் அடுத்தடுத்த மரணங்கள் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.