234 எம்.எல்.ஏக்கள் – 4500 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

 

234 எம்.எல்.ஏக்கள் – 4500 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

234 தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 4500 போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

234 எம்.எல்.ஏக்கள் – 4500 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு கடந்த 12ம் தேதி அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 3,818 ஆண்கள், 747 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என 4,500 பேர் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடைசிநாளான இன்று சுயேட்சைகள் அதிகமாக மனுதாக்கல் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்தது.