காதல் கணவன் விபத்தில் பலி; அங்கேயே தூக்கிட்டு மனைவி மரணம்

 

காதல் கணவன் விபத்தில் பலி; அங்கேயே தூக்கிட்டு மனைவி மரணம்

மரக்காணம் அடுத்த ஏந்தூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ், சரளா என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கும் முன்புதான் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

காதல் கணவன் விபத்தில் பலி; அங்கேயே தூக்கிட்டு மனைவி மரணம்

இந்நிலையில், ரமேஷ் தனது நண்பர்களுடன் பைக்கில் வானூரில் இருந்து கிளியனூருக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார்.அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளாது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிளியனூர் போலீசார் ரமேஷின் உடலை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷுடன் சென்று படுகாயமடைந்தவர்களையும் அதே மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கணவனுக்கு நேர்ந்த தகவலை கேட்டு மருத்துவமனைக்கு ஓடிப்போன சரளா, ரமேஷின் உடலைப்பார்த்து கதறு அழுதுள்ளார். உறவினர்கள் அவரை தேற்றினர். ஆனாலும் கதறி அழுதுகொண்டே இருந்திருக்கிறார்.

ரமேஷின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வந்த வேளையில் தீடிரென்று சரளா காணாமல் போயிருக்கிறார்கள். உறவினர்கள் நாலாபுறமும் தேடியபோது, மருத்துவமனை கழிவறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளது சரளாவின் சடலம்.

கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மனைவியும் உயிரிழந்தது உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

கலங்கிய கண்களுடனேயே இருவரின் இறுதிச்சடங்குகளை செய்து வருகின்றனர் உறவினர்கள்.