புல்லட் பிரபு வழக்கு : நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ்

 

புல்லட் பிரபு வழக்கு : நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ்

பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கி வரும் படம் கர்ணன். அசுரன் படத்திற்கு பின்னர் தயாரிப்பாளரும் தாணுவும் தனுஷும் இணைந்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது.

புல்லட் பிரபு வழக்கு : நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ்

இப்படத்தின் ‘கண்டா வரச்சொல்லுங்க’பாடல் வெளியாகி ஹிட்டடித்த நிலையில், இசையமைப்பாளர் தேவா பாடிய, ’பண்டாரத்தி புராணம்’ எனும் பாடல் கடந்த 2ம் தேதி என்று வெளியானது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே இப்படாலுக்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

கர்ணன் படத்தில் இருந்து இப்பாடலை நீக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் புல்லட் பிரபு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், கர்ணன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு, பாடலை பாடிய தேவா, பாடலுக்கு நடித்த தனுஷ் மற்றும் திரைப்பட தணிக்கை துறை மண்டல அலுவலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.