திமுக அணிக்கு நிதி கொடுத்து மைக்கில் அறிவிக்க சொன்ன அதிமுக தொண்டர்

 

திமுக அணிக்கு நிதி கொடுத்து மைக்கில் அறிவிக்க சொன்ன அதிமுக தொண்டர்

திமுக அணிக்கு நிதி கொடுத்ததோடு அல்லாமல் நிதி கொடுத்ததை மைக்கில் வேறு அறிவிக்கச்சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் ஒரு அதிமுக தொண்டர்.

திமுக அணிக்கு நிதி கொடுத்து மைக்கில் அறிவிக்க சொன்ன அதிமுக தொண்டர்

பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது மே-17 இயக்கம். பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மே-17 இயக்கத்தின் தொண்டர்களும், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியும் திமுக கூட்டணியினர் போட்டியிடும் தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திமுக அணிக்கு நிதி கொடுத்து மைக்கில் அறிவிக்க சொன்ன அதிமுக தொண்டர்

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவன தலைவர்,தி.வேல்முருகனுக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேல்முருகனுக்காக பண்ருட்டியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர் மே-17 இயக்கத்தினர்.

இதுகுறித்து திருமுருகன்காந்தி, ‘’வேல்முருகனுக்கான பரப்புரையில் பண்ருட்டியில் சந்தித்தோம். கடந்த வருடங்களில் அதிமுக-பாஜகவின் தமிழின விரோதத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றாக நடத்திய போராட்டத்தின் நீட்சியாக இன்று தேர்தல் களத்தில் மே17 தோழர்கள்பண்ருட்டி தொகுதியில் தோழர்.வேல்முருகன் மீதான அன்பையும், ஆதரவையும் போகுமிடமெல்லாம் மக்கள் வெளிப்படுத்தினார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

திமுக அணிக்கு நிதி கொடுத்து மைக்கில் அறிவிக்க சொன்ன அதிமுக தொண்டர்

மேலும், ‘’ அதிமுகவின் கொடுமைகளை அம்பலப்படுத்தினோம். எம் பிரச்சார பயணத்திற்கான நிதியை மக்களிடம் வேண்டினோம். தாராள பங்களிப்பை செய்து எம்மை உற்சாகப்படுத்தினர். பாஜகவின் மீதான வெறுப்பை மக்கள் அப்பட்டமாய் வெளிப்படுத்தினார்கள். அதிமுகவின் தொண்டர் ஒருவர் ரூ300 நிதியாய் கொடுத்து அதிமுக தொண்டன் கொடுத்தேன்னு அறிவியுங்கன்னு’ சொல்லி தலைமையை கடுமையாய் விமர்சித்தார். பாஜக எனும் பாறாங்கல்லை கழுத்தில் கட்டி கிணற்றில் குதித்திருக்கிறது அதிமுக’’ என்று தெரிவித்துள்ளார்.