இரவு முழுவதும் மனைவியின் சடலத்துடன்…ஆட்டோ டிரைவரை சிறைக்கு அனுப்பிய ரஜினிகாந்த்

 

இரவு முழுவதும் மனைவியின் சடலத்துடன்…ஆட்டோ டிரைவரை சிறைக்கு அனுப்பிய ரஜினிகாந்த்

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபி. சென்னையில் ஆலந்தூரில் இவர் ஆட்டோ ஓட்டிவந்தபோது, மகேஸ்வரி என்ற பெண் அறிமுகமாகி இருக்கிறார்.

இரவு முழுவதும் மனைவியின் சடலத்துடன்…ஆட்டோ டிரைவரை சிறைக்கு அனுப்பிய ரஜினிகாந்த்

கணவனுடன் விகாரத்து பெற்ற மகேஸ்வரிக்கும் கோபிக்கும் நாளடைவில் நெருக்கம் அதிகமாகி திருமணம் செய்துகொள்ளலாம் என்கிற முடிவெடுத்தனர். கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் கோபியுடன் மேல்நல்லாத்தூரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார் மகேஸ்வரி.

திருமணமாகி ஒரு மாதத்திற்குள்ளேயே கணவன் மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. நேற்று முன் தினம் இரவும் இருவருக்கும் சண்டை வந்திருக்கிறது. இதில் ஆத்திரமான கோபி, மகேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பின்னர் ரத்தத்தத்தை கூட கழுவாமல் மனைவியின் சடலத்துடனேயே இரவு முழுவதும் வீட்டுக்குள் இருந்திருக்கிறார்.

பொழுது விடிந்ததும் மணவாள நகர் போலீஸ் ஸ்டேஷன் சென்று நடந்ததை சொல்லி சரணடைந்தார். இதையடுத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த்,மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தார்.

ஆட்டோ டிரைவரிடம் மேற்கு விசாரனை நடத்தி வருகிறார்.