காதலன் மட்டும்தான் என்று நம்பி போன சிறுமி! வரிசையாக வந்த நண்பர்களால் நேர்ந்த கொடுமை!

 

காதலன் மட்டும்தான் என்று நம்பி போன சிறுமி! வரிசையாக வந்த நண்பர்களால் நேர்ந்த கொடுமை!

சென்னை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்த 15 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் காதலிப்பதாக சொல்லி சுற்றி சுற்றி வந்திருக்கிறார். சிறுமியும் அந்த இளைஞரின் காதல் வலையில் விழுந்து சிக்கியிருக்கிறார். இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகவே, ஓட்டலில் அறை எடுத்து கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு வரலாம் என்று கூறி, சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் வீச, மயக்கத்தில் இருந்த சிறுமியும் சம்மதித்து போய்விட்டார்.

காதலன் மட்டும்தான் என்று நம்பி போன சிறுமி! வரிசையாக வந்த நண்பர்களால் நேர்ந்த கொடுமை!

ஓட்டலுக்கு போய்விட்டு உடனே வந்துவிடலாம் என்கிற நம்பிக்கையில், வீட்டினர் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்றுவிட்டார். ஓட்டல் ரூமுக்கு போனபின்னர்தான் அவருக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. மேலும் இரண்டு இளைஞர்களும் வந்து சேர, மிரண்டு போன சிறுமியை மிரட்டி, மூன்று இளைஞர்களும் மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

அழுதபடியே வீட்டுக்கு போகவேண்டும் என்ற சிறுமியை சத்தம் போடாதவாறு செய்து, மூன்று பேரும் அன்றைக்கு முழுவதும் கூட்டு பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், மறுநாளும் அவ்வாறே செய்திருக்கின்றனர்.

காதலன் மட்டும்தான் என்று நம்பி போன சிறுமி! வரிசையாக வந்த நண்பர்களால் நேர்ந்த கொடுமை!

இதற்கிடையில், இரண்டு நாட்களாக தங்கள் மகளை காணாமல் ஊர் முழுக்க தேடி வந்த பெற்றோர்கள், பூந்தமல்லி போலீசிலும் புகார் கொடுத்து பார்த்தனர். போலீசாரும், உறவினர்களும் தேடி வந்த நிலையில், கந்தலாக வந்து சேர்ந்த சிறுமி கதறி கதறி அழுது தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லவும், போலீசில் விபரத்தை சொல்லவும், அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமியின் நடவடிக்கையில், அந்த மூன்று இளைஞர்களூம் சிக்கினர்.

மணி(26) -பூந்தமல்லி, கார்த்தி(23), செல்வராஜ்(23) – குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரம் இளைஞர்களை விசாரித்ததில், ஆசை வார்த்தை கூறி ஓட்டலுக்கு அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையத்து மூன்று இளைஞர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் போலீசார்.