அரிவாள் வெட்டில் தப்பிக்க பேரக்குழந்தையை குறுக்கே விட்ட தாத்தாவின் கொடூரம்

 

அரிவாள் வெட்டில் தப்பிக்க பேரக்குழந்தையை குறுக்கே விட்ட தாத்தாவின் கொடூரம்

காதல் தகராறில் தன் மேல் அரிவாள் வெட்டு விழாமல் இருக்க அருகே நின்ற எட்டு மாத குழந்தையை திடீரென்று தூக்கி குறுக்கே விட அரிவாள் வெட்டு அந்த குழந்தையின் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது அந்த குழந்தை. நெல்லை மாநகரத்தையே அதிரவைத்திருக்கிறது இந்த பயங்கரச்செயல்.

அரிவாள் வெட்டில் தப்பிக்க பேரக்குழந்தையை குறுக்கே விட்ட தாத்தாவின் கொடூரம்

நெல்லை மாவட்டம் மகிழடியைச் சேர்ந்த செவிலியர் ரோஸ்பிளசியும் பணகுடியை சேர்ந்த சிவசங்கரனும் காதலித்து வந்துள்ளனர். தன் வீட்டுக்கு முறைப்படி வந்து பெண் கேட்குமாறு கூறியிருக்கிறார்ரோஸ்பிளசி. அதன்படியே சிவசங்கரனும் சென்றிருக்கிறார்.

ரோஸ்பிளசியின் தந்தை ரசல்ராஜிடம் சென்று சிவசங்கரன் பெண்கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அது முற்றி கைகலப்பில் முடிந்தபோது, ஆத்திரத்தில் அங்கிருந்த அரிவாளை எடுத்து ரசல்ராஜை வெட்ட பாய்ந்திருக்கிறார் சிவசங்கரன். அப்போது அருகில் இருந்த இன்னொரு மகளின் 8 மாத குழந்தையை தூக்கி குறுக்கே நீட்டி தான் தப்பிக்க நினைத்திருக்கிறார் ரசல் ராஜ்.

அரிவாள் வெட்டில் தப்பிக்க பேரக்குழந்தையை குறுக்கே விட்ட தாத்தாவின் கொடூரம்

இதில், குழந்தை மீது அரிவாள் வெட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துவிட்டது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

காதல் தகராறில் எட்டு மாத குழந்தை வெட்டி கொலை செய்த சம்பவம் நெல்லை மாநகரையே அதிர செய்திருக்கிறது.