முதல்வருக்கு தொண்டையில்… இப்படித்தான் இருக்குமோ என திமுக விமர்சனம்

 

முதல்வருக்கு தொண்டையில்… இப்படித்தான் இருக்குமோ என  திமுக விமர்சனம்

தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் ஸ்டாலின். தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக அரசு மீது அபாண்டமாக பழி சுமத்தி வருகிறார் ஸ்டாலின் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தனது பிரச்சாரத்தில் கூறி வருகிறார்.

முதல்வருக்கு தொண்டையில்… இப்படித்தான் இருக்குமோ என  திமுக விமர்சனம்

இந்நிலையில், ’இப்படித்தான் இருக்குமோ?’ என்ற தலைப்பில் முரசொலியில் இதுகுறித்து ஒரு செய்தி வந்திருக்கிறது. கேள்வி -பதில் டைப்பில் வந்திருப்பதாவது:

கேள்வி: முதலமைச்சர் பழனிச்சாமி போகுமிடமெல்லாம் ‘’ஸ்டாலின் பொய் பேசுகிறார். பொய் பேசுபவர்களை ஆண்டவன் தண்டிப்பார்’’என்று கூறி வருகிறாரே…?

பதில்: கடலூரில் பேசியபோது தனக்கு தொண்டையில் புண் ஏற்பட்டுவிட்டதால் பேசமுடியவில்லை எனப் பேசியிருக்கிறார் பழனிச்சாமி! ஒரு வேளை பழனிச்சாமி கூறிய படி தொடர்ந்து அவர் கூறிவரும் பொய்களை ஆண்டவன் பொறுக்க முடியாமல் தண்டித்து விட்டாரோ என்னவோ?