’’மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்’’- சொல்லிவிட்டு உயிரைவிட்ட தொண்டர்!

 

’’மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்’’- சொல்லிவிட்டு உயிரைவிட்ட தொண்டர்!

உதயசூரியன் ஜெயிக்கும்.. திமுக ஆட்சி அமைக்கும்..மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்.. என்று சொல்லிக்கொண்டே, உயிரை விட்டார் திமுக தொண்டர் சுப்பையா. கடைசி நிமிடத்திலும் அவர், கையை விரித்து உதயசூரியன் சின்னத்தை காட்டியது கட்சியினரை நெகிழ வைத்திருக்கிறது.

’’மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்’’- சொல்லிவிட்டு உயிரைவிட்ட தொண்டர்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே இருக்கும் எழுவனம்பட்டியில் வசித்தவர் சுப்பையா. திமுக தொண்டரான இவர், 90 வயதில் உடல்நலமின்றி இருந்து வந்தார். ஆனாலும், டிவி, பத்திரிகை என்று திமுகவின் தேர்தல் நிலவரங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

’’மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்’’- சொல்லிவிட்டு உயிரைவிட்ட தொண்டர்!

நேற்று அவர் உயிருக்கு போரடிக்கொண்டிருந்த சமயத்தில், தனது குடும்ப பற்றி எதுவும் பேசாமல், கட்சியை பற்றி மட்டுமே பேசினார். உதயசூரியன் ஜெயிக்கும், ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று அவர் சொல்லிவிட்டு உயிரிழந்த செய்தி மாவட்டம் முழுவதும் பரவியதை அடுத்து, திமுக நிர்வாகிகள் நேரில் சென்று சுப்பையா உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுகவினரிடையே இந்த சம்பவம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.