சாமியார் சொன்னதால் மாணவனுடன் முதலிரவு நடத்திய டியூசன் டீச்சர்

 

சாமியார் சொன்னதால் மாணவனுடன் முதலிரவு நடத்திய டியூசன் டீச்சர்

பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் பஸ்திபாவா கெல் பகுதியில் வசித்து வந்த டீச்சருக்கு மாங்கல்ய தோஷம் இருந்ததால் திருமணம் நடைபெறாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்துள்ளது.

சாமியார் சொன்னதால் மாணவனுடன் முதலிரவு நடத்திய டியூசன் டீச்சர்

இதனால் கவலை அடைந்த பெற்றோர்கள் அந்த பகுதியின் பிரபல சாமியாரை சந்தித்து தங்களது குறைகளை சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார்கள். அதைக்கேட்ட சாமியார், பெண்ணுக்கு இருக்கும் மாங்கல்ய தோசம் தீர வேண்டுமென்றால் சிறுவனை பொம்மை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். கல்யாணத்திற்கு முன்னும் பின்னும் எப்படி எல்லாம் சடங்குகள் செய்கிறீர்களோ அதே மாதிரிய பாரம்பரிய வழக்கப்படி செய்ய வேண்டும். அப்படி செய்தால் மாங்கல்யதோசம் போய்விடும், சீக்கிரத்தில் கல்யாண திசைவரும் என்று சொல்லி இருக்கிறார்.

பெற்றோர்களும் அதை நம்பி மகளிடம் கூற, சிறுவனுக்கு எங்கே போவது என்று யோசித்தனர். அப்போது தன்னிடம் படிக்கும் சிறுவன்களில்13 வயது மாணவன் ஒருவரை பொம்மை திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டார்.

சாமியார் சொன்னதால் மாணவனுடன் முதலிரவு நடத்திய டியூசன் டீச்சர்

ஒரு வாரம் டீச்சர் வீட்டில் தங்கியிருந்து படிக்கவேண்டும் என்று வீட்டில் சொல்லிவிட்டு வா என்று அந்த சிறுவனிடம் சொல்ல, அவனிடம் அப்படியே சொல்லிவிட்டு வந்துவிட்டான்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்து மெஹந்தி விழா முதல் முதலிரவு வரைக்கும் நடத்தி முடித்துவிட்டார்கள். மறுநாள் வளையல்களை உடைத்து விதவையும் ஆக்கிவிட்டார்கள். அதன்பின்னர் கல்யாணம் நடைபெறும் என்பது சாமியார் சொன்ன நம்பிக்கை.

இதன்பின்னர் வீட்டுக்கு சென்ற சிறுவன், நடத்தையில் சந்தேகம் வந்ததால் , குடும்பத்தினர் விசாரித்தபோது உண்மையை உளறியுள்ளான். தன்னை கட்டாயப்படுத்தியே ஒவ்வொன்றையும் செய்ய வைத்ததாக கூறியுள்ளான். இதையடுத்து பெற்றோர், பஸ்தி பாவா கெல் போலீசில் அளித்தனர்.

இருதரப்பினரையும் அழைத்து பேசியபோது, சிறுவன் வீட்டாரை டீச்சர் பேசி சமாதானப்படுத்தி விட்டார். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. ஆனாலும் இந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.