டிராக்டரில் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் பழனிச்சாமி

 

டிராக்டரில் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் பழனிச்சாமி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டிராக்டரில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். நன்னிலம் வேட்பாளர் காமராஜும் முதல்வருடன் டிராக்டரில் நின்று வாக்கு சேகரித்தார்.

டிராக்டரில் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் பழனிச்சாமி

கடந்த மாததில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை-குன்னத்தூரில் காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் திரளான மக்கள் நடுவே டிராக்டரில் வருகை தந்த தந்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர் டிராக்டரை ஓட்டி வந்தார்.

அதுபோலவே இன்றைய தேர்தல் பிரச்சாரத்திலும் முதல்வர் டிராக்டரில் நின்று பிரச்சாரம் செய்தார்.

டிராக்டரில் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் பழனிச்சாமி

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பிரச்சாரம் செய்த முதல்வர் இன்றைக்கு திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

குடவாசல் எல்லையில் இருந்து பேருந்து நிலையம் வரைக்கும் டிராக்டரில் பேரணியாக சென்று பிரச்சாரம் செய்தார். பள்ளிவாசல், கடைத்தெரு வழியாக முதல்வர் பிரச்சாரம் செய்துகொண்டே சென்றார்.

டிராக்டரில் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் பழனிச்சாமி

முதல்வருடன் நன்னிலம் தொகுதி வேட்பாளர் காமராஜுன் அருகில் நின்று வாக்கு சேகரித்தார்.