திமுக எம்எல்ஏவின் ரவுடியிசம் – பாஜக ஆவேசம்

 

திமுக எம்எல்ஏவின் ரவுடியிசம் – பாஜக ஆவேசம்

தமிழ் மண்ணை அழிக்கும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம். திமுகவை தமிழ் நாட்டில் அனுமதிக்கவும் வேண்டாம் என்று தெரிவித்திருக்கும் தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராமின் எழுத்தில் ஆவேசம் தெரிக்கிறது. திமுக எம்எல்ஏவின் திமிர் பேச்சுதான் அவரை இந்த அளவிற்கு ஆவேசப் படுத்தி இருக்கிறது.

திமுக எம்எல்ஏவின் ரவுடியிசம் – பாஜக ஆவேசம்

திமுக ஆட்சிக்கு வந்தால் வன்முறை வெடிக்கும். ரவுடியிசம் அதிகமாகும் என்று பிரதமர் மோடி சொன்னபோது ஸ்டாலின் பொங்கி எழுந்தார். பிரதமர் அளந்து பேச வேண்டுமென்று ஆவேசமானார். அவரது கட்சியினரும் கொதித்தெழுந்தார்கள். ஆனால், கரூரில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் இந்த ரவுடியிச பேச்சுக்கு என்ன பதில்சொல்லப்போகிறது திமுக? என்று பிரச்சாரத்தில் செந்தில்பாலாஜி பேசிய வீடியோ இணையங்களில் வைரலாகிறது.

திமுக எம்எல்ஏவின் ரவுடியிசம் – பாஜக ஆவேசம்

நான் ஒன்றை சொல்லிக்கொள்கின்றேன். மாட்டுவண்டியில் மணல் எடுப்பதற்கு தளபதி ஆட்சியில் தடையில்லை. தளபதி முதலமைச்சராக பதவியேற்றதும், 11மணிக்கு முதலமைச்சராக தளபதி பதவியேற்றுக்கொண்டால், 11.05க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான். தடுத்தா எனக்கு போன் போடுங்க. அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான்’’ என்று பிரச்சாரத்தில் செந்தில் பாலாஜி பேசியதை அடுத்தே காயத்ரி ரகுராம் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.