2300 அடி உயரத்தில் தனது நாயுடன் பறந்து பறந்து சாகசம் செய்யும் இளைஞர்!

 

2300 அடி உயரத்தில் தனது நாயுடன் பறந்து பறந்து சாகசம் செய்யும் இளைஞர்!

பாராகிளைடிங் என்று சொல்லப்படும் இந்த விளையாட்டில், பலர்மலைகளில் அல்லது விமானங்களில் இருந்து குழுக்களாகவோ அல்லது ஜோடிகளாகவோ குதித்து சாகசம் செய்வார்கள். இருப்பினும், சில நபர்கள் இந்த த்ரில் அனுபவத்தை தங்களுக்கு மட்டுமல்ல, தங்கள் செல்லப்பிராணிகளுக்கும் வழங்கவேண்டும் என உறுதி கொண்டுள்ளார்கள்.

 உயரத்தில் இருந்து குதித்து பாராசூட் மூலம் பறப்பது பலரின் பொழுதுபோக்காக இருக்கிறது. உயிருக்கே ஆபத்தான இந்த விளையாட்டை பல ஆர்வலர்கள் விரும்பி செய்கின்றனர்.

பாராகிளைடிங் என்று சொல்லப்படும் இந்த விளையாட்டில், பலர்மலைகளில் அல்லது விமானங்களில் இருந்து குழுக்களாகவோ அல்லது ஜோடிகளாகவோ குதித்து சாகசம் செய்வார்கள். இருப்பினும், சில நபர்கள் இந்த த்ரில் அனுபவத்தை தங்களுக்கு மட்டுமல்ல, தங்கள் செல்லப்பிராணிகளுக்கும் வழங்கவேண்டும் என உறுதி கொண்டுள்ளார்கள்.

parachute

புருனோ வாலண்டே என்பவர் மற்றவர்களைப் போல தான் மலைகளின் மேல் இருந்து குதித்து பாரச்சூட்டில் சாகசம் செய்கிறார்.. ஆனால் இவர் குதிக்கும் போது தனது நண்பர் ஒருவரையும் சேர்த்துக்கொண்டு தான் இந்த சாகசங்கள் செய்வார். அந்த நண்பர் வேறு யாருமல்ல அவருடைய செல்லநாய் கஸுசா.

இந்த வாரம், அவர் 2,300 அடி உயரத்திலிருந்து தனது நாயுடன் குதித்து பாதுகாப்பாக தரையில் இறங்கினார். ஆனால் குஸுசா இந்த சாகசத்திற்கு புதிதல்ல. வாலண்டே தனது நாயுடன் அடிக்கடி இந்த பாராச்சூட் பிளையிங் நிகழ்த்துகிறார்.