23 வயது இளைஞருக்கு 40 வயது பெண்ணுடன் ஏற்பட்ட காதல்… எதிர்ப்பு கிளம்பியதால் லாட்ஜில் எடுத்த விபரீத முடிவு

 

23 வயது இளைஞருக்கு 40 வயது பெண்ணுடன் ஏற்பட்ட காதல்… எதிர்ப்பு கிளம்பியதால் லாட்ஜில் எடுத்த விபரீத முடிவு

மயிலாடுதுறையை சேர்ந்தவர் செல்வம். 23 வயதாகும் இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தஞ்சை வீரமாங்குடியை சேர்ந்த ஜெயா என்ற 40 வயது பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ஜெயா சித்தாளாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர். இருப்பினும் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனியாக வசித்து வந்துள்ளார்.

23 வயது இளைஞருக்கு 40 வயது பெண்ணுடன் ஏற்பட்ட காதல்… எதிர்ப்பு கிளம்பியதால் லாட்ஜில் எடுத்த விபரீத முடிவு

இதையடுத்து செல்வத்துக்கும் ஜெயாவுக்குமான நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாற இருவரும் அடிக்கடி கும்பகோணத்தில் உள்ள லாட்ஜில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில் இதற்கு இரு வீட்டார் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மனமுடைந்த இவர்கள் அதே லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

23 வயது இளைஞருக்கு 40 வயது பெண்ணுடன் ஏற்பட்ட காதல்… எதிர்ப்பு கிளம்பியதால் லாட்ஜில் எடுத்த விபரீத முடிவு

அதன்படி நேற்று மதியம் இவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் லாட்ஜ் ஊழியர்கள் சென்று பார்த்த போது ஜெயா -செல்வம் ஜோடி, “தற்கொலை செய்யலாம்னு விஷம் குடிச்சிட்டோம். எங்களை காப்பாத்துங்க” என்று அழுதுள்ளனர்.

இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.