சசிகலாவின் அடுத்த திட்டம்… ஜெயலலிதாவுக்கு சமையல் செய்து கொடுத்த பெண் வருகை!

 

சசிகலாவின் அடுத்த திட்டம்… ஜெயலலிதாவுக்கு சமையல் செய்து கொடுத்த  பெண்  வருகை!

சென்னை வந்த சசிகலா திநகர் இல்லத்தில் கோமாதா பூஜை செய்து வழிபட்டார்.

சசிகலாவின் அடுத்த திட்டம்… ஜெயலலிதாவுக்கு சமையல் செய்து கொடுத்த  பெண்  வருகை!

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறைக்கு சென்ற சசிகலா விடுதலைக்கு பின்னர் இன்று சென்னை வந்தார். பெங்களூரு விடுதியில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்த அவர், நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டு தமிழகம் வந்தார். சசிகலாவுக்கு எதிர்பார்க்காத அளவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரும் வழியெல்லாம் தொண்டர்கள் கோஷம் எழுப்பி மலர் தூவி மரியாதை செய்தனர்.

சசிகலாவின் அடுத்த திட்டம்… ஜெயலலிதாவுக்கு சமையல் செய்து கொடுத்த  பெண்  வருகை!

வழியில் அதிமுக கொடி சசிகலா காரில் இருந்ததால் அவரை வழிமறித்த போலீசார் கொடியை அகற்றக்கோரி நோட்டீஸ் அளித்தனர். அதற்கு முன்பாகவே சசிகலா அதிமுக தொண்டர் ஒருவரின் காரில் மாறினார், அதில் கட்சி கொடி இருந்தது. இதை தொடர்ந்து சசிகலாவ வரவேற்க வந்த இரு கார்கள் தீப்பற்றி எரிந்தன. இதனால் கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு ஏற்பட்டது. இப்படி பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் இன்று அதிகாலை சசிகலா சென்னை வந்தார்.

சசிகலாவின் அடுத்த திட்டம்… ஜெயலலிதாவுக்கு சமையல் செய்து கொடுத்த  பெண்  வருகை!

இந்நிலையில் சென்னை வந்த சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியாவின் சென்னை திநகர் இல்லத்திற்கு வந்த சசிகலாவுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு கோமாதா பூஜை நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட சசிகலா கோமாதா பூஜை செய்து வழிபட்டார். 23 மணிநேரம் பயண களைப்பாக வந்துள்ள சசிகலா இரண்டு நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கவுள்ளாராம். அவருக்கு சமையல் செய்ய, போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு சமையல் செய்து கொடுத்து வந்த ராஜம் என்பவர் கிருஷ்ணப்ரியா இல்லத்திற்கு வந்துள்ளார்.