வங்கதேசத்தில் படகும், கப்பலும் மோதல் – 23 பேர் பலி; பலரை காணவில்லை

 

வங்கதேசத்தில் படகும், கப்பலும் மோதல் – 23 பேர் பலி; பலரை காணவில்லை

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் படகும், கப்பலும் மோதிய விபத்தில் 23 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் கப்பலும், ஒரு படகும் மோதிய விபத்தில் படகு நீரில் கவிழ்ந்தது. இதையடுத்து இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து வந்தனர். மூழ்கிய படகில் இருந்து 23 சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். மேலும் பலரை காணவில்லை என்று தெரியவந்துள்ளது.

மொத்தம் 50 பேர் படகில் பயணித்ததாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளனர். நாட்டின் பல படகு மற்றும் கப்பல்களில் கட்டுமான பாதுகாப்புத் தரம் குறைவாக இருப்பதால் வங்கதேசத்தில் படகு விபத்துக்கள் நிகழ்வது தொடர்கதையாக உள்ளது. படகில் அதிகம் பேர் பயணிப்பது அல்லது மோசமான வானிலை காரணமாக படகு விபத்துகள் வாடிக்கையாக அந்நாட்டில் நிகழ்கின்றன.