23 குளங்களை தூர்வாரி சுத்தம் செய்த ரஜினி மக்கள் மன்றத்தினர்!

 

23 குளங்களை தூர்வாரி சுத்தம் செய்த ரஜினி மக்கள் மன்றத்தினர்!

ரஜினி மக்கள் மன்றத்தின் மூலம் அவரது ரசிகர்கள் 23 குளங்களை தூர்வாரி சுத்தம் செய்துள்ளனர். 

ரஜினி மக்கள் மன்றத்தின் மூலம் அவரது ரசிகர்கள் 23 குளங்களை தூர்வாரி சுத்தம் செய்துள்ளனர். 

சென்னை கோடம்பாக்கத்தில் ராகவேந்திர திருமண மண்டபத்தில் 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி பேசிய ரஜினிகாந்த், சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன் என்று தெரிவித்தார். கட்சி தொடங்க போவதாக ரஜினி கூறி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதற்கான அறிவிப்புகள் வெளிவந்த பாடில்லை. வரும் ஆனா வராது என்பது போல அவர் அறிவிப்பு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

ரஜினி மக்கள் மன்றம்

இதற்கிடையில் கட்சியை தொடங்காமல் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி அதில் ரசிகர்கள் உள்ளிட்ட மக்கள் சேவை செய்யும் செய்யும் பலரை இனைத்தார். நாடு முழுவதும் இருக்கக்கூடிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரத்ததானம், அன்னதானம், நிதி உதவி, கொசு ஒழிப்பு, தண்ணீர் விநியோகம் போன்ற உதவிகளை செய்துவருகின்றனர். 

இந்நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் 23 குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறி நாளையுடன் 2 வருடங்கள் ஆகும் நிலையில் அவர் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் எந்த பிரதிபலனும் பார்க்காமல் அவரது ரசிகர்கள் பொதுசேவை செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.