ஈரோடு: தீபாவளி பண்டிகையையொட்டி 22 கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு

 

ஈரோடு: தீபாவளி பண்டிகையையொட்டி 22 கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு

ஈரோடு மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலில்
அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, காவல்துறை சார்பில் 22 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள ஜவுளி கடைகளில் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது.

ஈரோடு: தீபாவளி பண்டிகையையொட்டி 22 கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு

இந்நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக் பாக்கெட், திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டு மாநகரில் 22 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து இன்று ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டது. இதேபோல் மற்ற பகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.