ஓபிஎஸ்-ஈபிஎஸ் கொடுத்த வாக்குறுதியை நம்பி இருக்கிறேன்.. எம்.ஜி.ஆர். பேரன் உருக்கம்

 

ஓபிஎஸ்-ஈபிஎஸ் கொடுத்த வாக்குறுதியை நம்பி இருக்கிறேன்.. எம்.ஜி.ஆர். பேரன் உருக்கம்

மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வளர்ப்புமகள் சுதா விஜயகுமாரின் மகன் ராமச்சந்திரன். இவர் அதிமுகவில் ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிபட்டி தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுதாக்கல் செய்திருந்தார். போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை என்றாலும், தேர்தல் பிரச்சாரத்திற்காக தேனி வந்திருந்தவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் கொடுத்த வாக்குறுதியை நம்பி இருக்கிறேன்.. எம்.ஜி.ஆர். பேரன் உருக்கம்
இபிஎஸ் – ஓபிஎஸ்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமச்சந்திரன், ‘’கமல்ஹாசன் உள்பட பலரும் என்னை அழைத்தனர். ஆனால், கொடியும், சின்னமும் எங்கு இருக்கிறதோ அங்குதான் இருப்பேன் என்று உறுதியாக இருந்தேன். எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என்றுதான் ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிபட்டி தொகுதிகளில் விருப்ப மனு தாக்கல் செய்தேன்.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் கொடுத்த வாக்குறுதியை நம்பி இருக்கிறேன்.. எம்.ஜி.ஆர். பேரன் உருக்கம்

சீனியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் எனக்கு சீட் கிடைக்கவில்லை. அதனால் எனக்கொன்றும் வருத்தம் இல்லை. கட்சியில் முக்கியமான பதவி தருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். அவர்களின் வாக்குறுதியை நம்பி காத்திருக்கிறேன்.’’என்றார்.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் கொடுத்த வாக்குறுதியை நம்பி இருக்கிறேன்.. எம்.ஜி.ஆர். பேரன் உருக்கம்