அது வேற வாய்… சிக்கிய உதயநிதிஸ்டாலின்

 

அது வேற வாய்… சிக்கிய உதயநிதிஸ்டாலின்

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு திமுக சார்பில் முதலில் பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்றார். கோயில்களுக்கு சென்று சாமி கும்பிட்டார். கிறிஸ்துவ ஆலங்களூக்கும் சென்று ஆசி பெற்றார். மடங்களுக்கு சென்று ஆதீனத்திடமும் ஆசி பெற்று வருகிறார்.

அது வேற வாய்… சிக்கிய உதயநிதிஸ்டாலின்

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியிருப்பதால் அத்தொகுதி முழுக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உதயநிதி, அப்படியே செய்து வருகிறார்.

இதுகுறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ‘’நியாபகம் இருக்கிறதா உதயநிதிஸ்டாலின்… எனக்கும் என் மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. என் மகளின் விருப்பத்திற்காக பிள்ளையார் படம் ட்வீட் செய்தேன், என சொன்னது நினைவிருக்கிறதா?’’ என்று கேட்கிறார்.

அது வேற வாய்… சிக்கிய உதயநிதிஸ்டாலின்

தமிழக பாஜவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவரான காயத்ரி ரகுராம், ‘’ எனக்கும் என் மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை..உதயநிதி சீசனுக்கு சீசன் மாறுமா உங்கள் கொள்கை, அல்லது அது வேற வாய்.,இது வேற வாயா?தேர்தல் வந்தால் எவ்வளவு நாடகம் தான் போடுவீர்களோ?’’ என்ற கேள்வியை எழுப்புகிறார்.