கவுதமியை கலங்க வைத்த ராஜேந்திரபாலாஜி!

 

கவுதமியை கலங்க வைத்த ராஜேந்திரபாலாஜி!

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி தனக்கு ஒதுக்கப்படும் என்று நம்பி வேலை செய்து வந்த குஷ்பு, அத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் குஷ்பு வேதனையில் இருப்பதுபோல், ராஜபாளையம் தொகுதியை பாஜக சார்பில் கவுதமி எதிர்பார்த்திருந்து ஏமாந்தது போய் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கவுதமியை கலங்க வைத்த ராஜேந்திரபாலாஜி!

ராஜாபாளையம் தங்களுக்குத்தான் என்று பாஜக நினைத்திருந்ததால், அத்தொகுதியில் நடிகை கவுதமியை நிறுத்த முடிவு செய்திருந்தது. கவுதமியும் கடுமையாக பிரச்சாரம் செய்து வந்தார்.

ராஜேந்திரபாலாஜி போட்டியிடுவதாக வந்த அறிவிப்பினால் கடும் அதிருப்தியில் உள்ளார் கவுதமி. ஆனாலும் அவர், ‘’இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னை பாவித்து கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி, உங்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன். உங்கள் அன்பின் வாயிலாக கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன்’’ என்று கூறியிருக்கிறார்.

கவுதமியை கலங்க வைத்த ராஜேந்திரபாலாஜி!

கடந்த முறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திரபாலாஜி இந்த முறை ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார். சிவகாசி தொகுதியில் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக தொகுதி மாறி ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார்.

கவுதமியை கலங்க வைத்த ராஜேந்திரபாலாஜி!

இதனால் ராஜபாளையம் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க முடியாமல் போய்விட்டது. ராஜேந்திரபாலாஜியின் கடைச்சேர மாற்றத்தினால், கலங்கி நிற்கிறார் கவுதமி. அவருக்கு மாற்று தொகுதி அமையுமா என்பதும் பெரும் கேள்விக்குறியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.