’’நான் நல்ல பாம்பு ஒரே கடியில் உன்னை காலி செய்துவிடுவேன்’’ மோடி மேடையில் பஞ்ச் அடித்த மிதுன் சக்கரவர்த்தி

 

’’நான் நல்ல பாம்பு ஒரே கடியில் உன்னை காலி செய்துவிடுவேன்’’ மோடி மேடையில் பஞ்ச் அடித்த மிதுன் சக்கரவர்த்தி

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, கடந்த கடந்த 2014ம் ஆண்டில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. ஆனார். ஆனால், சாரதா ஊழலில் அவர் பெயரும் அடிபட்டதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார்ர்.

திரிணாமுல் கட்சியில் ஒதுங்கியே இருந்த மிதுன் சக்கரவர்த்தி தற்போது பாஜகவில் இணைந்திருக்கிறார்.

’’நான் நல்ல பாம்பு ஒரே கடியில் உன்னை காலி செய்துவிடுவேன்’’ மோடி மேடையில் பஞ்ச் அடித்த மிதுன் சக்கரவர்த்தி

மேற்கு வங்காலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். மோடி பங்கேற்ற மேடையில் மிதுன் சக்கரவர்த்தி பேசியதுதான் மீடியாக்களில் அதிகம் இடம்பெற்றிருக்கிறது.

மேடையில் பேசும்போது, திரைப்படத்தில் தான் பேசிய டயலாக் ஒன்றை பேசினார். அதே டயலாக்கினை கொஞ்சம் மாற்றியும் பேசி காட்டினார். இதனால் கூட்டத்தினர் கைத்தட்டி, விசில் அடித்து ஆர்ப்பரித்தனர்.

’’நான் நல்ல பாம்பு ஒரே கடியில் உன்னை காலி செய்துவிடுவேன்’’ மோடி மேடையில் பஞ்ச் அடித்த மிதுன் சக்கரவர்த்தி

’’நான் பெங்காலி என்பதில் பெருமைப்படுகிறேன்’’ என்று பேச்சை தொடங்கியவர், ‘’ என் படத்தில் நான் பேசிய பஞ்ச் டயலாக்குகளை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள். இது எனக்கு நன்றாகவே தெரியும்’’ என்று சொல்லிவிட்டு, ‘’நான் சாதாரண பாம்புன்னு தவறாக நினைச்சுடாத..நான் ஒரு நல்ல பாம்பு ஒரே கடியில் உன்னை காலி செய்துவிடுவேன்’’ என்றார்.

இது பழைய டயலாக். இதையே கொஞ்சம் மாற்றி சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, ‘’நான் நல்ல பாம்பு ஒரே கடியில் நீ போட்டோவாக மாறிவிடுவாய்’’ என்று பஞ்ச் பேசினார்.