இலங்கை: தமிழகத்தில் இருந்து கடத்திச்சென்ற 225 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

 

இலங்கை: தமிழகத்தில் இருந்து கடத்திச்சென்ற 225 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்திச்செல்லப்பட்ட 225 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அந்நாட்டு கடற்படை, இதுதொடர்பாக இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இலங்கை: தமிழகத்தில் இருந்து கடத்திச்சென்ற 225 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

இலங்கை யாழ் மாவட்டம் ஆழியவளை பகுதியில் இன்று அதிகாலை சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை சுற்றிவளைத்த, அந்நாட்டு கடற்படையினர், படகில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தமிழகத்தில் இருந்து சுமார் 225 கிலோ கஞ்சாவை படகில் கடத்திவந்தது தெரியவந்தது.

இலங்கை: தமிழகத்தில் இருந்து கடத்திச்சென்ற 225 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

இதனையடுத்து, அந்த படகை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற கடற்படையினர், கஞ்சாவைவும், படகையும் பறிமுதல் செய்ததுடன், படகில் இருந்த இருவரை பளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்செய்து சிறையில் அடைத்தனர்.