சிறுவனை விழுங்கிய முதலை: வயிற்றை கிழித்து மீட்டனர்

 

சிறுவனை விழுங்கிய முதலை: வயிற்றை கிழித்து மீட்டனர்

இரண்டு சிறுவர்கள் தங்களின் தந்தையுடன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, எட்டு வயது சிறுவன் திடீரென தண்ணீருக்குள் இழுத்துச்செல்லப்பட்டான். சுழல் வந்து இழுக்கிறது என்று நினைத்த தந்தை, மகனை பிடித்து இழுக்க நினைத்தபோதுதான் சிறுவனின் காலை கவ்விக்கொண்டிருந்த முதலை மேலே வந்தது.

சிறுவனை விழுங்கிய முதலை: வயிற்றை கிழித்து மீட்டனர்

அதிர்ச்சி அடைந்தாலும் மகனை காப்பாற்ற, முதலையின் உடம்பில் கைகளால் அடித்து, கடித்தார் தந்தை. ஆனாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த சிறுவனை கடித்து விழுங்கிவிட்டது. உடனே தண்ணீருக்குள்ளும் சென்றுவிட்டது.

கரைக்கு வந்து கதறி அழுத தந்தையின் சத்தம் கேட்டு ஓடி வந்த ஊரார், விபரத்தை அறிந்ததும், ஆறு முழுவதும் வலை வீடி தேடி வந்தனர். அப்போது, 6 அடி நீளமுள்ள ஒரு ராட்சத முதலை சிக்கியது. ஆனால், இறந்த நிலையில் அது பிடிபட்டது.

சிறுவனை விழுங்கிய முதலை: வயிற்றை கிழித்து மீட்டனர்

பிடிபட்ட முதலையை குப்புற கவிழித்துப்போட்டு வயிற்றை கிழித்துப்பார்த்தனர். எட்டு வயது சிறுவன் இரண்டு துண்டுகளாக இறந்து கிடந்தான். சிறுவனின் உடலை மீட்டு எடுத்த போது, பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். அக்கிராமத்தினரும் கண்ணீர் சிந்தினர்.

இந்தோனேஷியாவில் உள்ள போர்னியோ தீவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.