எச்.ராஜா மீது பாயும் கம்யூனிஸ்டுகள்

 

எச்.ராஜா மீது பாயும் கம்யூனிஸ்டுகள்

தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வருக்கே நேரடி தொடர்பு இருப்பதாக கேரள உயர்நீதிமன்றத்தில் சுங்கத்துறை பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதால் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கம்யூனிஸ்டுகள் குறித்து பாஜகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

எச்.ராஜா மீது பாயும் கம்யூனிஸ்டுகள்

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால், ‘’கியூபா வில் இருந்து கொரோனா மருந்து கொண்டு வரப்போவதாக சொன்னவர், புனே தடுப்பூசியை போட்டுக்கொண்ட போது…’’ என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கமெண்ட் அடித்துள்ளார்.

எஸ்.ஆர்.சேகரின் அந்த டுவிட்டை குறிப்பிட்டு, ’’தங்கம் கடத்துவது போல் தடுப்பூசி கடத்த முடியலயாம்’’ என்று கமெண்ட் அடித்திருக்கிறார் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா.

எச்.ராஜா மீது பாயும் கம்யூனிஸ்டுகள்

’’யோவ் ஹைகோர்ட்டு உனக்கு காரைக்குடியில் பாயாசம் ரெடி பண்ணிட்டு இருக்காங்க.’’ என்றும், ‘’அதான் சிலைகடத்தல் சிற்பி லாம் அங்க இருக்கும் போது….இவரு எப்படி கடத்த முடியும்….கூப்டு training குடுத்து விடுங்க’’ என்றும், ‘’மச்சான் 10 கேட்டு 6 வாங்குன நம்மல கலாய்ச்சான்ல..
பக்கத்துல ஒருத்தன் 60 கேட்டு 20 வாங்கிட்டு வந்துருக்கான்டா..’’ என்றும் எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.