ஸ்டாலின் தொகுதியில் கமலுக்கு பெருகும் ஆதரவு

 

ஸ்டாலின் தொகுதியில் கமலுக்கு பெருகும் ஆதரவு

கடந்த சில நாட்களாக சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன். அறுவை சிகிச்சைக்கு பின்னர் செண்டிமென்டாக எம்.ஜி.ஆர். கொடுத்த ஆலந்தூர் மீன் மார்க்கெட்டில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

ஸ்டாலின் தொகுதியில் கமலுக்கு பெருகும் ஆதரவு

எம்.ஜி.ஆர் தந்த ஆலந்தூர் மீன் மார்க்கெட்டில் துவங்கியது என் பிரச்சாரம். மயிலை மாங்கொல்லை வரை தொடர்ந்தது மக்கள் வெள்ளம். மடிப்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். நல்லவர்களே வருக என்றவர், சல்லிசாக மக்களை வாங்கலாம். நல்ல விலைக்கு தமிழகத்தை விற்கலாம் என மனப்பால் குடிக்கும் ஊழல் திலகங்களின் எண்ணம் ஈடேறாது என்பதை நேற்று மடிப்பாக்கத்தில் திரண்ட மக்கள் வெள்ளம் காட்டியது. அடுத்து கொளத்தூரில் உரையாற்றுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின் தொகுதியில் கமலுக்கு பெருகும் ஆதரவு

கொளத்தூர் திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதி என்பதால், கூடுதல் எதிர்பார்ப்புடன் சென்ற கமலுக்கு மக்கள் ஆதரவு பெருகியது கண்டு உற்சாகத்தில், ’’கழகங்கள் உருவானதும் காலத்தின் கட்டாயம். ஊழலில் ஊறி போய்விட்ட கழகங்கள் வெளியேற்றப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயம். தமிழர்கள் தங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற தயாராகி விட்டதன் சாட்சி கொளத்தூரில் கூடிய மக்கள் திரள். இன்று அம்பத்தூரில்.’’ என்று தெரிவித்துள்ளார்.