ஸ்டாலின் சொன்ன சமாதானம்; ஏற்க மறுக்கும் உதயநிதி

 

ஸ்டாலின் சொன்ன சமாதானம்; ஏற்க மறுக்கும் உதயநிதி

உதயநிதிஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கே வாரிசு அரசியல் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட திமுகவின் வாரிசு அரசியலை சாடி வருகிறார்கள்.

ஸ்டாலின் சொன்ன சமாதானம்; ஏற்க மறுக்கும் உதயநிதி

இதுபற்றிய கேள்விகளுக்கு எல்லாம், திமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. கட்சிக்காக உழைத்தவர்களுக்குதான் பதவி என்று சொல்லி வருகிறார். ஆனாலும், உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு தொகுதிகளில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். உதயநிதியும் தனியாக விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். ஆனாலும் வரும் 10ம் தேதி வெளியாகும் திமுக வேட்பாளர்கள் பட்டியலில் உதயநிதி பெயர் இருக்காது என்கிறார்கள்.

உதயநிதிக்கு எப்படியும் சீட் கொடுப்பது உறுதி என்று நினைத்துக்கொண்டு சீனியர்கள் பலரும் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டதால், இப்போதைக்கு நீ போட்டியிட வேண்டாம். நீ போட்டியிட்டால் இதை வைத்தே எதிர்க்கட்சியினர் பிரச்சாரத்தை ஓட்டிவிடுவார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் சொல்லி இருக்கிறார். அதை ஏற்க மனசில்லாமல், எதுவும் சொல்லாமல் அப்செட்டில் வெளியேறிவிட்டாராம் உதயநிதி.