இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி; பாஜக தோல்வி

 

இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி; பாஜக தோல்வி

டெல்லியில் ஐந்து மாநகராட்சி வார்டுகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி; பாஜக தோல்வி

ஐந்து டெல்லி மாநகராட்சி வார்டு தேர்தலில் 4ஐ ஆம் ஆத்மி கைப்பற்றியது. ஒரு வார்டில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. சௌகான் பங்கர் வார்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றியை பெற்றிருக்கிறது. ரோகினி, திரிலோக்புரி, ஷாலிமர் பாக், கல்யாணபுரி இடங்களை கைப்பற்றிய ஆத் ஆத்மி கட்சியினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

போட்டியிட்ட ஒரு தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாதது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி; பாஜக தோல்வி

குஜராத் உள்ளிட்ட மாநில உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று வந்த நிலையில் டெல்லியில் பாஜகவுக்குபின்னடைவு ஏற்பட்டுள்ளது அகட்சியினரிடையே அதிர்ச்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி மக்கள் பாஜக மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்றே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.