’நாடாருக்கென தனி நாட்டை அமைத்திடுவோம்’- ஹரிநாடார் – ராக்கெட் ராஜா ஆவேசம்

 

’நாடாருக்கென தனி நாட்டை அமைத்திடுவோம்’- ஹரிநாடார் – ராக்கெட் ராஜா ஆவேசம்

நெல்லை மாவட்டம் மேல இலந்தைக்குளம் கிராமத்தில் பிறந்த ஹரிநாடார், ‘பனங்காட்டுப்படை’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். நாங்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தையும் பிடித்தார். சினிமாவில் பைனான்ஸ் தொழில் செய்துவந்த அவர், இப்போது, 2கே அழகானது காதல் படத்தினை தயாரித்து ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

’நாடாருக்கென தனி நாட்டை அமைத்திடுவோம்’- ஹரிநாடார் – ராக்கெட் ராஜா ஆவேசம்

இந்நிலையில், ‘’புலிப்புலி இது பாயும் புலி வேட்டையாட இது வந்த புலி’’ என்று ராக்கெட் ராஜாவுடன் இணைந்து ஹரிநாடார் நடித்துள்ள ஒரு பாடல் வீடியோவினை ஹரிநாடாரே தனது முகநூலில் வெளியிட்டிருக்கிறார்.

நாடார் தொகுதிகளை மீட்டெடுக்க புறப்படுவோம். இல்லையெனில் நாடாருக்கென தனி நாட்டை அமைத்திடுவோம். நாடார்களின் அரசியல் ஆட்டம் ஆரம்பம் என்று வேறு என்று சொல்லி இருப்பதால் இது சினிமா பாடலா? அல்லது பனங்காட்டுப் படை கட்சியின் தேர்தல் பிரச்சார பாடலா? என்று தெரியவில்லை.