அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜான்பாண்டியன்

 

அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜான்பாண்டியன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ‘’50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேன்மொழி வெற்றிபெறுவார்’’ என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறிவருவதைப்பார்த்தால், மீண்டும் தேன்மொழிக்குத்தான் சீட்டு என்று கட்சியினர் பேசி வருகிறார்கள்.

அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜான்பாண்டியன்

இது ஒருபுறம் இருக்க, அதிமுக கூட்டணியில் இருக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன், நிலக்கோட்டை தொகுதியில் தனக்கு சீட் ஒதுக்குமாறு அதிமுகவிடம் கேட்டு வருகிறாராம்.

அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜான்பாண்டியன்

அதிமுகவிடம் தொகுதியை கேட்டுக்கொண்டிருக்கும்போதே, ‘நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் ஜான் பாண்டியனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்’ என்ற போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, தேன்மொழி தரப்பினரை அதிரவைத்திருக்கிறது.