திமுக நேர்காணலுக்கு சென்ற தொண்டர்களுக்கு அதிர்ச்சி

 

திமுக நேர்காணலுக்கு சென்ற  தொண்டர்களுக்கு அதிர்ச்சி

ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் தொடங்கியது. மார்ச் 2ம் தேதியான இன்று முதல் மார்ச் 6-ம் தேதி வரை திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

திமுக நேர்காணலுக்கு சென்ற  தொண்டர்களுக்கு அதிர்ச்சி

இந்நிலையில், திமுக நேர்காணலுக்கு சென்ற அப்பாவி தொண்டர்களுக்கு அதிர்ச்சி !ஏற்கனவே யாருக்கு வாய்ப்பு என்று கிச்சனும் உதவாத நிதியும் ஸ்டாலினும் முடிவெடுத்து வைத்துகொண்டு அவர்களை மட்டும் அழைத்து நேர்காணல் நடத்தி 15 கோடி, 20 கோடி செலவு செய்யவேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துவிட்டு ,

திமுக நேர்காணலுக்கு சென்ற  தொண்டர்களுக்கு அதிர்ச்சி

சீட்டு கேட்டு பணம் கட்டிய தொண்டர்களை ஆட்டு மந்தைகளை போல் உள்ளே அழைத்து தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு வேலை செய்யுங்கள் என்று அறிவுரை சொல்லி அனுப்புகின்றனர் என்று சொல்லும் தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம், எதற்கு இந்த கண் துடைப்பு நேர்காணல் நாடகம்? என்று கேள்வி எழுப்புகிறார்.

சாமான்யர்களின் கட்சி திமுக என்று அண்ணாதுரை சொன்னார். இன்று பண முதலைகளும் கோடீஸ்வர அரசியல்வாதிகளுக்கும் , மாவட்ட செயலாளர்களுக்கும் அவர்களது வாரிசுகளுக்குமான கட்சியாகிவிட்டது. அப்பாவி திமுக தொண்டர்களே! பொதுமக்களே விழித்துக்கொள்வீர் என்றும் அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.