அமிதாப் பச்சனுக்கு கண் அறுவை சிகிச்சை

 

அமிதாப் பச்சனுக்கு கண் அறுவை சிகிச்சை

சினிமா மற்றும் விளம்பரங்களில் இப்போதும் பிசியாக இருக்கும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கண் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.

அமிதாப் பச்சனுக்கு கண் அறுவை சிகிச்சை

ஏற்கனவே கல்லீரல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்தார் அமிதாப்பச்சன். 70 சதவிகிதம் கல்லீரல் பாதிப்பு அடைந்ததால், அடிக்கடி உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் கொரோனா வந்து அதிலிருந்தும் மீண்டு வந்தார்.

தற்போது கண் அறுவை சிகிச்சைக்காக அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வயதில் கண் அறுவை சிகிச்சை என்பதால் மருத்துவர்கள் மிகவும் நுட்பமாக கையாளுகின்றனர் என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கண் அறுவை சிகிச்சையினால் சரியாக எழுத முடியவில்லை. தட்டச்சு பிழைகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளவும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அமிதாப்பச்சன் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட செய்தியறிந்து, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.