பாலியல் தகராறு; நண்பனின் தாயை அடித்துக்கொலை செய்த இளைஞர்

 

பாலியல் தகராறு; நண்பனின் தாயை அடித்துக்கொலை செய்த இளைஞர்

தனது ஆசைக்கு ஒத்துழைக்காத நண்பனின் தாயை அடித்துக்கொலைசெய்த இளைஞரின் செயலால் அதிர்ந்து போயிருக்கிறது சட்டீஸ்கர் மாநிலம்.

பாலியல் தகராறு; நண்பனின் தாயை அடித்துக்கொலை செய்த இளைஞர்

சட்டீஸ்கரில் மகசாமுந்த்தை சேர்ந்தவர் சித்து., இருபது வயதான இந்த இளைஞருக்கு, தனது நண்பனின் தாயான42வயது பெண்மணி மீது ஒரு கண். எப்படியாவது அந்த பெண்ணை அனுபவித்து விட வேண்டும் என்றுதிட்டம் போட்டிருக்கிறார். அதன்படி சம்பவத்தன்று இரவு வயலில் இருக்கும் அறுவடைஇயந்திரத்தை பார்த்துவிட்டு வந்துவிடலாமென்று அழைத்திருக்கிறான் சித்து. தன்மகனின் நண்பன், தன் வீட்டில்பழகி வரும் ஒரு பிள்ளை என்கிற நம்பிக்கையில் அந்த பெண்ணும் சித்துவுடன் சென்றிருக்கிறார்.

பாலியல் தகராறு; நண்பனின் தாயை அடித்துக்கொலை செய்த இளைஞர்

வயலுக்கு சென்றதும், ஆள்நடமாட்டம் இல்லாததை தெரிந்துகொண்டு, அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் திடுக்கிட்ட அப்பெண், சித்துவின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதனால் கோபத்தில் இருந்த சித்து, அங்கிருந்த கல்லைதூக்கி பெண்ணின் தலையில் போட்டுவிட்டார்.

இதில் அலறியபடியே ரத்த வெள்ளத்தில் சரிந்தார் அப்பெண். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள்,அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

தலைமறைவகாக உள்ள சித்துவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.