காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம்… விரக்தியில் ராணுவ வீரர் தற்கொலை…

 

காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம்… விரக்தியில் ராணுவ வீரர் தற்கொலை…

தூத்துக்குடி

ஒட்டப்பிடாரம் அருகே காதல் தோல்வியால் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த வெள்ளாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாபு(24). இவர் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பாபு, அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் அறிந்த பெண்ணின் வீட்டார், அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்து உள்ளனர்.

காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம்… விரக்தியில் ராணுவ வீரர் தற்கொலை…

இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி விடுமுறையில் பாபு சொந்து ஊருக்கு வந்துள்ளார். காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் மன வேதனையில் இருந்த அவர், இன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, தூத்துக்குடி அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பாபுவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.