திரள்வோம் திருச்சியில்! மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாடு

 

திரள்வோம் திருச்சியில்! மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாடு

அறவழிபோரட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கக்கோரி திருச்சியில் மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க பேரணி மாநாடு நடைபெற இருக்கிறது.

திரள்வோம் திருச்சியில்! மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாடு

8வழிசாலை, மீத்தேன், ஸ்டெர்லைட், கூடன்குளம், நீட், CAA, ஈழம், தாதுமணல், ஜல்லிக்கட்டு, டாஸ்மாக், கெயில், உழவர், ஒக்கி, ஜாதியம்.. என
‘போராடும் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை இரத்து செய்யக்கோரி’ அனைத்து மக்கள் இயக்கங்களும் ஒன்றுகூடும் மாநாடு வரும் மார்ச் மாதம் 6ம் தேதி அன்று மாலை 3 மணிக்கு திருச்சியில் நடைபெறுகிறது என்றும், அதற்காக ’திரள்வோம் திருச்சியில்’ என்றும் அறிவித்திருக்கிறார் மே-17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி.

திருச்சியில் உழவர் திடலில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. ’அதிமுக – பாஜக அரசே! உரிமைகள் கோரும் அறவழிப்போராட்டங்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறு என்று மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க பேரணி மாநாடு அன்று நடைபெறும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.