பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுகவை பற்றி பேச உரிமையில்லை… ஸ்டாலின் கடும் தாக்கு

 

பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுகவை பற்றி பேச உரிமையில்லை… ஸ்டாலின் கடும் தாக்கு

கோவை கொடிசியா அரங்கத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி திமுக மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசிய மு. க. ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுகவை பற்றி பேச உரிமையில்லை… ஸ்டாலின் கடும் தாக்கு

திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்ட அவர், 2002ல் குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுகவை பற்றி பேச உரிமையில்லை. திமுகவை பற்றி வாய்க்கு வந்ததை பேசுவதை மோடி இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.

குஜராத்தில் இத்தகைய காரியத்தை செய்துவிட்டு டெல்லியில் வந்து உட்கார்ந்து கொண்டால் மறந்துவிடுவோமா? அந்த பாவங்கள் துடைக்கப்பட்டுவிடுமா என்றும் தெரிவித்தார்.

பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுகவை பற்றி பேச உரிமையில்லை… ஸ்டாலின் கடும் தாக்கு

ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டு அப்பாவி அதிமுக தொண்டர்களை ஏமாற்ற வந்துள்ளார் மோடி என்று பேசிய ஸ்டாலின், அப்பாவி அதிமுக தொண்டர்களின் வாக்கினை திருடி போக வந்த மோடிக்கு உரிமையில்லை. பாஜகவில் சேர்ந்து ரவுடிகளின் பட்டியலை வெளியிட்டு, இந்த பட்டியலில் உள்ளவர்கள் எல்லாரும் யார் என்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் மோடி அவர்களே, இல்லை என்றால் இரண்டாம் இடத்தில் இருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையாவது தெரிந்து கொள்ளச்சொல்லுங்கள் என்று கடுமையாக சாடினார்.

பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுகவை பற்றி பேச உரிமையில்லை… ஸ்டாலின் கடும் தாக்கு

பிரதமர் மோடியின் கொள்கையால் சிறு, குறு , நடுத்தர தொழில்கள் சிதைக்கப்பட்டுவிட்டன என்பது அவருகே தெரியும். மோடி பேசுவது பச்சைப்பொய் என்பது கோவை, திருப்பூரை சேர்ந்த சிறு,குறூந்தொழில் அதிபர்களுக்கும் தெரியும் என்றவர், டெல்லியில் கொட்டும் பனியில் கிடந்து போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகள் மீது கொஞ்சமும் இரக்கம்காட்டாதவர் மோடி. ஆனால், இந்திய நாட்டின் வேளாண்மையை காக்க வந்த தவப்புருஷர் போல பேசிவிட்டு போய்விட்டார் பிரதமர் மோடி என்று கடுமையாக தாக்கினார்.