தா.பாண்டியன் நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர விழைகிறேன்..ஸ்டாலின்

 

தா.பாண்டியன்  நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர விழைகிறேன்..ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறுநீரக பாதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தா.பாண்டியன்  நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர விழைகிறேன்..ஸ்டாலின்

சிறுநீரக பிரச்சனையினால் கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு டயாலிஸ் சிகிச்சை நடைபெற்று வருகிறது. நேற்று திடீரென்று சிறுநீரக பாதிப்பு அதிகமானது. மேலும், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் ராஜீவ்காந்தி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரகம் மற்றும் ரத்தம் அழுத்தம் தொடர்பான சிகிச்சைகள் அளித்தும் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தா.பாண்டியன்  நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர விழைகிறேன்..ஸ்டாலின்

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் விரைந்து நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர விழைகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2018ம் ஆண்டு உடல்நிலை மிகவும் மோசமாகி இருந்த தா.பாண்டியனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார் ஸ்டாலின்.