ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார் மோடி; ‘கோயம்புத்தூரில் இருப்பேன்’ என டுவிட்

 

ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார் மோடி; ‘கோயம்புத்தூரில் இருப்பேன்’ என டுவிட்

தனி விமானம் மூலம் காலை 7. 45 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி காலை 10 .25 மணிக்கு சென்னை வந்தடைந்தார் . சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு காலை 11.20 மணிக்கு புதுச்சேரி சென்றடைகிறார்.

ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார் மோடி; ‘கோயம்புத்தூரில் இருப்பேன்’ என டுவிட்

சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி புறப்பட்டார்.

காரைக்காலில் உள்ள ஜிப்மர் வளாகத்தில் 491 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

புதுச்சேரியில் இன்று அரசு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் மோடி. மாலை 3 மணி புதுச்சேரியில் பங்கேற்கும் மோடி, 3. 35 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு வருகிறார். கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று 12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார் மோடி.

ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார் மோடி; ‘கோயம்புத்தூரில் இருப்பேன்’ என டுவிட்

தமிழகத்தில் 12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று மாலை கோவை வருகிறார். கோவை கொடிசியா மைதானத்தில் இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.

நெய்வேலியில் புதிய அனல் மின் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் திருப்பூர் வீரபாண்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய 1280 குடியிருப்புகள், திருக்குமரன் நகரில் கட்டப்பட்ட 1248 குடியிருப்புகள், மதுரை ராஜாக்கூரில் கட்டப்பட்ட ஆயிரத்து 88 குடியிருப்புகள், திருச்சி இருங்கலூரில் கட்டப்பட்ட 1088 குடியிருப்புகளை தொடங்கி வைக்கிறார். மதுரை, கோவை, தஞ்சை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட இருக்கிறார். கோவை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அங்கிருந்து டெல்லி செல்கிறார் பிரதமர் மோடி.

முன்னதாக நேற்று, ’’தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப் படுகிறது. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை கோயம்புத்தூரில் இருப்பேன்’’ என்று தமிழில் தெரிவித்துள்ளார் மோடி.