அகமதாபாத்தில் 22 வயது கர்ப்பிணி பாலியல் வன்கொடுமை !

 

அகமதாபாத்தில் 22 வயது கர்ப்பிணி பாலியல் வன்கொடுமை !

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே நரோலின் பிப்லாஜ் பகுதியில் பாரத் பர்மர் என்ற நபரால் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை நரோல் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணை வாயை மூடிக்கொள்ளும்படி மிரட்டி உள்ளார். இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கணவரிடம் சொல்ல கணவர் மூலம் நரோல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அந்த நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
பெண்ணின் கணவர் லால் தர்வாஜாவுக்கு துணி வாங்கச் சென்றிருந்தார். அப்போது பாரத் பர்மர் அவர்களது வீட்டிற்கு வந்து கணவர் எங்கே என கேட்டார். அவர் துணி வாங்க வெளியே சென்றதாக அவரிடம் சொன்னபோது, அந்த நபர் வீட்டில் உட்கார்ந்து அவரை பார்த்து விட்டுதான் செல்வேன் என அடம்பிடித்துள்ளார்.

அகமதாபாத்தில் 22 வயது கர்ப்பிணி பாலியல் வன்கொடுமை !
அப்போது அந்த பெண் கணவர் வந்த பின் வீட்டிற்கு வருமாறு கூறினார். ஆனால் பர்மர் திடீரென்று அந்தப் பெண்ணைப் பிடித்து படுக்கைக்குத் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பெண்ணின் கணவர் திரும்பி வந்தபோது தனக்கு நேர்ந்த துயரம் குறித்து விவரித்துள்ளார். பின்னர் அவர்கள் நரோல் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்தபோது பெண் தடுத்ததால் அவளின் உடலின் மற்ற பாகங்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் தலைமறைவான பர்மரை தேடிவருகின்றனர்.