“ஏண்டா காலையில கஞ்சா அடிக்கிறே ,சாயந்திரம் சாராயம் குடிக்கிறே” கண்டித்த தாயை கொலை செய்த டிஸ்கோ பாடகர்..

 

“ஏண்டா காலையில கஞ்சா அடிக்கிறே ,சாயந்திரம் சாராயம் குடிக்கிறே” கண்டித்த தாயை கொலை செய்த டிஸ்கோ பாடகர்..

டெல்லியில் ஒரு டிஜே குடிபோதையில் பெற்ற தாயை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பினை உண்டாக்கியுள்ளது .

டெல்லியின் மடங்கிர் சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் உள்ள அம்பேத்கார் நகரில் வசிக்கும் 22 வயதான சாகர் என்பவர் ஒரு டிஸ்கொ ஜாக்கி (DJ ).அவர் தன்னுடைய 45 வயதான தாயுடன் வசிக்கிறார் .அவருடைய தந்தை இறந்துவிட்டார் .சாகர் ஒரு டிஜே என்பதால் பல பார்ட்டிகளில் டான்ஸ் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார் .அப்படி பல நிகழச்சிகளுக்கு பல ஹோட்டல்களுக்கு போனதால் அவருக்கு போதை பழக்கம் ஏற்பட்டுள்ளது .இதனால் கஞ்சா மற்றும் ஆல்கஹாலுக்கு அடிமையானார்

“ஏண்டா காலையில கஞ்சா அடிக்கிறே ,சாயந்திரம் சாராயம் குடிக்கிறே” கண்டித்த தாயை கொலை செய்த டிஸ்கோ பாடகர்..

இதனால் அவருக்கும் அவரின் தாயாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும் .அடிக்கடி பார்ட்டிகளுக்கு போய்விட்டு வரும் சாகர் அங்கு குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம் ,இது அவரின் தாய்க்கு பிடிக்காது .இதனால் இந்த குடிப்பழக்கத்தினை விடச்சொல்லி அவரின் தாயார் மகனோடு அடிக்கடி சண்டை போடுவார் .

“ஏண்டா காலையில கஞ்சா அடிக்கிறே ,சாயந்திரம் சாராயம் குடிக்கிறே” கண்டித்த தாயை கொலை செய்த டிஸ்கோ பாடகர்..
இப்போது கொரானாவால் ஹோட்டல்களில் பார்ட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மனம் நொந்த டிஜே சாகர் பகலிலும் குடிப்பழக்கத்துக்கு ஆளானார்.திங்கள் கிழமை பகல் 12 மணியளவிலேயே குடித்துவிட்டு சாகர் வந்ததால், இதை அறிந்த தாயார் வழக்கம்போல சத்தம் போட ,பதிலுக்கு அவர் கத்தியால் தாயாரை குத்தியுள்ளார் .இதனால் அவர் வலி தாங்காமல் ரத்த வெள்ளத்தில்

“ஏண்டா காலையில கஞ்சா அடிக்கிறே ,சாயந்திரம் சாராயம் குடிக்கிறே” கண்டித்த தாயை கொலை செய்த டிஸ்கோ பாடகர்..கத்திக்கொண்டிருந்தார் .அப்போது அக்கம் பக்கத்த்திலுள்ளவர்கள் அவரின் தாயாரை மருத்துவமனையில் சேர்க்க தூக்கிக்கொண்டு போனபோது அவரை செக் பண்ணிய டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள் .இதனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ,விரைந்து வந்த போலீசார் தாயாரை கொன்ற மகன் சாகரை கைது செய்தனர் .