கொ.ம.தே.க.வுக்கு 2 சீட்; ஈஸ்வரன் மகிழ்ச்சி

 

கொ.ம.தே.க.வுக்கு 2 சீட்; ஈஸ்வரன் மகிழ்ச்சி

எதிர்வரும் ஏப்ரல் 6 ம்தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மமக மற்றும் முஸ்லீம் லீக்குடன் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

கொ.ம.தே.க.வுக்கு 2 சீட்; ஈஸ்வரன் மகிழ்ச்சி

இந்நிலையில் நேற்று நடைபெற இருந்த கொ.ம.தே.கவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது திமுக. நேற்றைய பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டு இன்றைய பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது திமுக.

இதையடுத்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இன்று தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின்போது 6 தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் கொங்குஈஸ்வரன் வலியுறுத்தினார். இறுதியில் 2 சீட் தருவதாக திமுக சொல்லவும், ஈஸ்வரன் அதற்கு ஒப்புக்கொண்டார்.

கொ.ம.தே.க.வுக்கு 2 சீட்; ஈஸ்வரன் மகிழ்ச்சி

கேட்ட 6 சீட் கிடைக்காவிட்டாலும் கூட 2 சீட் கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ஈஸ்வரன். ஆனாலும், நாளையும் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.