சென்னையில் இன்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணங்கள்!

 

சென்னையில் இன்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணங்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களை அச்சுறுத்த வைக்கும் இந்த கொரோனா வைரஸால் அதிக அளவு பாதிப்பைடைந்த மாநிலங்களில் 2 ஆவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 25,344 பேர் குணமடைந்து விட்டதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளால் பெருந்தொற்றாக உருவெடுத்த இந்த வைரஸ் பாதிப்பு , சென்னையில் தான் அதிக அளவு பரவியிருக்கிறது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணங்கள்!

இந்த கொடிய வைரஸ் பாதிப்பு சென்னையில் தான் அதிக அளவு பரவியிருக்கும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பது இங்கு தான். இந்நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் கொரோனாவால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் மியாட் மருத்துவமனையில் ஒருவரும் கே.எம். சி மருத்துவமனையில் 3 பேரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 5 பேரும் அப்போலோ மருத்துவமனையில் ஒருவரும் ராமச் சந்திரா மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.