ஸ்டாலினுக்கு வந்த 2 லட்சம் கடிதங்கள்

 

ஸ்டாலினுக்கு வந்த 2 லட்சம் கடிதங்கள்

தமிழக மக்களின் விருப்பங்களையும், தேவைகளையும் கண்டறிய 30.9.2020 அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இதையடுத்து, தொழில் வளர்ச்சி இல்லை, வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும், சாலைவசதி இல்லை, தண்ணீர் பிரச்சனை, தலைவர் தலைமையில் திமுக ஆட்சி மரல வேண்டும் என்று தங்களது கருத்துக்களை மக்கள் தெரிவித்து வருவதாகவும், கடந்த 2 மாதங்களில் 2 லட்சம் கடிதங்கள் வந்துள்ள என்றும் தெரிவித்துள்ள திமுக, 5 லட்சம் தொலைபேசி உரையாடல்கள், 1,50,000 இணையவழி பரிந்துரைகள் நடந்துள்ளன என்றும் தெரிவித்திருக்கிறது.

ஸ்டாலினுக்கு வந்த 2 லட்சம் கடிதங்கள்

இதுகுறித்து ஸ்டாலின், விடியும்வா முன்னெடுப்பின் மூலம் தமிழக மக்களின் கருத்துகளை நேரடியாக கேட்டறிந்து வருகிறேன். ஒரு புதிய விடியலை நோக்கி, இதுவரை 2,00,000-க்கும் அதிகமான கடிதங்கள் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளன. நம்பிக்கையுடன் உங்கள் கருத்துகளை என்னிடம் பகிர்ந்தமைக்கு நன்றி! தமிழகம்_மீட்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலினுக்கு வந்த 2 லட்சம் கடிதங்கள்