இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது – 22 கிலோ கஞ்சா பறிமுதல்!

 

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது – 22 கிலோ கஞ்சா பறிமுதல்!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திவந்த இளைஞரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், பட்டிவீரன்பட்டி போலீசார் சித்தரேவு முத்தலாம்மன் கோவில் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது – 22 கிலோ கஞ்சா பறிமுதல்!

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, வாகனத்தில் இருந்த 2 இளைஞர்கள் தப்பியோடிய நிலையில், ஒருவரை போலீசார், மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். இதில், வாகனத்தில் 22 கிலோ அளவிலான கஞ்சா பொட்டலங்களை மறைத்து கடத்தியது தெரிய வந்தது.

இதனையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த நவநீதன் என்பதும், விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கடத்தியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, நவநீதனை கைதுசெய்த போலீசார், தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.