ஒரு ஊசிமருந்து ரூ.22 கோடி; 2வயது சிறுமிக்கு வந்த நிலை

 

ஒரு ஊசிமருந்து ரூ.22 கோடி; 2வயது சிறுமிக்கு வந்த நிலை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது28). இவரது மகள் மித்ரா(வயது2) முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமி தானாக குனிய முடியாது நிமிரவும் முடியாது. தானாக படிகளில் ஏறி இறங்கவும் முடியாது. அதிக நேரம் நிற்கவும் முடியாது. இப்படி எந்த செயலையும் தானாக செய்ய முடியாத நிலை இருக்கிறது.

ஒரு ஊசிமருந்து ரூ.22 கோடி; 2வயது சிறுமிக்கு வந்த நிலை

சதீஷ்குமாரும் அவரது மனைவி பிரியதர்ஷினியும்(வயது22) பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் பிரயோசனமில்லை.

சிறுமியை பரிசோதித்த மருத்துவ நிபுணர்கள், zolgensmaஎன்கிற ஊசி மருந்து செலுத்தினால் இந்த நோயை குணப்படுத்தி விடலாம். இந்த மருந்து சுவிட்சர்லாந்தில் மட்டுமே கிடைக்கிறது. ஒரு ஊசிமருந்தின் விலை 16 கோடி ரூபாய் என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு ஊசிமருந்து ரூ.22 கோடி; 2வயது சிறுமிக்கு வந்த நிலை

ஜவுளி வியாபாரம் செய்து வரும் சதிஷ்குமார் இதைக்கேட்டு, அதிச்சியாகிவிட்டார். ஒரு ஊசி மருந்தின் விலை 16 கோடி ரூபாய். அதை இறக்குமதி செய்ய 6 கோடி ரூபாய். ஆக மொத்தம் 22 கோடி ரூபாய் தேவை என்றதும் செய்வதறியாது தவித்த நிலையில், ஒரு ஆறுதலான செய்தி கிடைத்திருக்கிறது. ஐதராபாத்தில் உள்ள சிறுவனுக்கு இதேநோய் வந்துள்ளது என்றும், அந்த சிறுவனின் தந்தை அரசின் உதவியாலும், நன்கொடையினாலும் அந்த ஊசி மருந்தை வாங்கி செலுத்தி மகனை குணப்படுத்தி இருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பலரிடம் நன்கொடை கேட்டதில் இதுவரைக்கும் ஒரு கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. மேற்கொண்டு உதவிகேட்டு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கண்ணீருடன் கோரிக்கை வைத்திருக்கிறார் சதீஷ்குமார். மேலும் தன் குழந்தைக்கு உதவி செய்ய கேட்டு, 9500623402, 7598606767 என்ற தொடர்பு எண்களையும் வெளியிட்டிருக்கிறார்.