விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு…கமல் அழைப்பு

 

விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு…கமல் அழைப்பு

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும்பதிப்பாளர்கள் இணைந்த பபாசி சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் பிரம்மாண்டமாக புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு…கமல் அழைப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் இந்த புத்தக கண்காட்சி நடைபெறும். கொரொனாவினால் இந்த வருடன் தள்ளிப்போய்விட்டது. நாளை 24ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம்தேதி வரையிலும் இந்த கண்காட்சி நடக்க இருக்கிறது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், ‘’சென்னை புத்தகக் காட்சி பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. 44 ஆண்டுகளாக நடக்கும் கலாச்சார நிகழ்வு. தமிழின் மாபெரும் அறிவியக்கத்தின் விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு இது. பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் அறிவமுதம் பருக வருக’’ என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.